Friday, May 6, 2011

நானா சொன்னேன் ?

நானா சொன்னேன் என் கண்களிடம்
அவளை பார் என்று ..
நானா சொன்னேன் என் பேனாவிடம்
அவள் பெயரை மட்டும் எழுது என்று..
நானா சொன்னேன் என் கால்களிடம்
அவளை நோக்கி நீ நட என்று..
நானா சொன்னேன் என் நாவிடம்
அவளை பற்றி கவிதை என்று..
நானா சொன்னேன் என் விரல்களிடம்
அவளை பற்றி மட்டும் இசை மீட்டு என்று ...
இப்படி நானாக சொல்லாமல்
எல்லாம் தானாக நிகழ்கிறது
அவள் மீது நான் கொண்ட காதல் போல !!!!

Thursday, April 28, 2011

கடல் அலையின் காதல்


ஒரே ஒரு முறை ஊர் வந்த போது 
கால் நனைத்துப்போனாயோ  கடல் அலையில் 
கடலுக்கும் உன் மேல் காதல் வர 
இதோ இன்று வரை 
வந்து வந்து பின் செல்கிறது 
மீண்டும் உன் கால்கள் தழுவமுடியாத 
ஏக்கத்தோடு - என்னைப்போலவே. !

Thursday, December 30, 2010

புறப்படு என் தோழா - பிறப்பது நம் உலகம் .. !!!

பிறக்குது பிறக்குது புது உலகம் 
புறப்படு என் தோழா ..
பணம் பத்து வந்து போகட்டும் 
பாச பந்தம் அதை நீ மறந்து போகாதே 
நல்ல பாதை மாற்றி பயணம் போகாதே 
உன் சோகங்களுக்கு சுதந்திரம் கொடுத்து விடு 
அதன் தாக்கம் தான் தொலைந்து போகட்டும் 
அன்பு அது அளவில்லாது பொழியட்டும் 
பண்பு அது பெருமளவு பெருகட்டும்
மனதில் சிறு மாற்றம் கொண்டு வா 
அந்தச் சீற்றம் சில சிறப்புகள் - ( புகழ் ) செய்துவிடும் - உன் 
முகத்தில் புதுப்பொழிவு பூத்துவிடும் .. 
கானகத்தில் புது காவியம் படைத்து விடு 
காலம் உன் கதையை கூறட்டும் ..  
இளைப்பாராது உன் இலக்கை அடைந்து விடு 
இவ்வுலகம்  உன்னை உற்றுப் பார்க்க விடு .. 
தோல்விகள்  தொலைத்து 
வெற்றிக்கு ஒரு வேள்வி நடத்து 
வையகத்தை உன் கையகத்தே கொண்டு வா..
பறவைகள் பறப்பது போல் 
சிறகுகள் விரித்து 
சிந்தனை செழித்து 
சந்ததிகளுக்கு ஒரு சான்றாய் 
சாதனை செய்துவிடு ..
புறப்படு என் தோழா ..
பிறப்பது நம் உலகம் .. !!! 



முதல் பதிப்பு !

அனைவருக்கும் வணக்கம் .
     
                             இதோ இன்று முதல் "என் கவிதை கிறுக்கல்கள்" என்னும் தலைப்பின் கீழ் என் கற்பனைகளுக்கு கவிதை , கதை என புது அரிதாரம் பூசி உங்கள் முன் சமர்பிக்கிறேன். 
                          என் எண்ணங்களுக்கு ஒரு வடிவம் கொடுக்க உதவிய அத்துணை நண்பர்களுக்கும்  இங்ஙனம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் .

தோழமைகளுக்கு நன்றி நன்றி ... !!! 

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!